RSS

Tuesday, August 9, 2011

ரமழான் துஆக்கள்

ரமழான் காலத்தில் நாம் அதிகமதிகம் வணக்க வழிப்பாடுகளில் ஈடுபடுவோம் .அல்லாஹ்வின் அருளைப்பெறுவோம். 

முதல் பத்து தினங்களில்
 அல்லாஹ்வின் அருளை،கிருபயை நம்மீது பொழிந்தருள  கீழ் வரும் துஆவை அதிகம் ஓத வேண்டும்.
اللهم ارحمنا  برحمتك يا  أرحم راحمين     
பொருள்:கிருபையாளர்களுக்கெல்லாம் மகா கிருபையாளனே! உன்னுடைய அருளைக் கொண்டு எங்களுக்கு கிருபை செய்வாயாக!

இரண்டாவது பத்தில் 
பாவமன்னிப்பை நாடி இந்த துஆவை அதிகமாக  ஓதவேண்டும்.

 اَلّلهُمَّ اغْفِرْلَناَ   ذُنُوْبَناَ  خَطَايَاناَ  كُلَهَا  يَا رَبَّ  الْعَالَمِيْن


பொருள்:யா அல்லாஹ்! அகிலத்தாரை இரட்சிப்பவனே!எங்களுடைய தவறுகளையும்.எங்கள் அனைத்து பாவங்களையு மன்னித்து  அருள்புரிவாயாக!

இறுதி பத்தில்


நரக வேதனையை விட்டு பாதுகாவல் வேண்டி இந்த துஆவை  அதிகமாக  ஓதவேண்டும்.

اللهم  أعتقنا من النار وأدخلنا  الجنة  يا رب العالمين  


பொருள்;உலகத்தாரை இரட்சிப்பவனே! நரக நெருப்பிலிருந்து எங்களுக்கு விடுதலை அளிப்பாயாக! இன்னும் சுவர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வாயாக!


மேலும் துஆக்களுக்கு இதையும் பாருங்களேன்

உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

0 comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்கள்

நன்றி

தமிழ்,ஆங்கில இஸ்லாமிய இணையதளங்களுக்கு ஜஜாக்குமுல்லாஹூ கைர்.